Friday, November 20, 2009

<>தன்னார்வலர்களாக சேருங்கள் இன்றே!<>


அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட
இளையர்கள் மற்றும் தன்னார்வலர்களே,

அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு உங்களின் தன்னலமற்ற சேவை, தேவை. உங்களின் பொன்னான நேரத்தை சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு அளிக்க முன்வாருங்கள். சமுதாயத்தில் அக்கறை உள்ளவர்
நீங்கள் என்றால் தாமதமில்லாமல் உங்கள் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை
இங்கே பதிவு செய்து ஒத்துழையுங்கள். அரசோடு இணைந்து கரம்கோர்த்து செயற்பட வாருங்கள் என்று அழைக்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் விரும்பும்
உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.

<>உங்கள் ஆலோசனைகள்<>


அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட பொதுமக்களே,
உங்கள் ஆலோசனைகளை இங்கே பதிவு செய்யுங்கள்.
அரசுப் பணி, பொதுப்பணி,நலத்திட்டப்பணிகளில் இப்படிச் செய்யலாமே என்ற மிக நல்ல ஆலோசனைகளை இங்கே பதிவு செய்யுங்கள்.

பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தங்கள் ஒத்துழைப்புக்கு என் முன்கூட்டிய நன்றிகள்.
இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்பும்
உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.

<>உங்கள் புகார்கள்<>

அன்பார்ந்த நாமக்கல் மாவட்ட பொதுமக்களே,
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யுங்கள். சாலை வசதி, குடிநீர் வசதி,பேருந்து வசதி,அலுவலகங்களில் ஏற்படும் தாமதங்கள் போன்ற நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் போன்றவற்றை இங்கே புகாராக பதிவு செய்யுங்கள்.

பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள புகார் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தனி நபர் மீதான புகார்களை இங்கே பதிவு செய்ய வேண்டாம். தங்கள் ஒத்துழைப்புக்கு என் முன்கூட்டிய நன்றிகள்.
இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் விரும்பும்

உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.

வாங்க, வந்து சொல்லுங்க!

அன்பார்ந்த பொதுமக்களே,
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் திகழ் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற இந்த "நாமக்கல் மாவட்ட ஆட்சியர்" வலைப்பூவை மலர விடுவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

காந்தி கனவு கண்ட கிராம இராஜ்யம் உருவாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட தமிழக முதல்வர் எடுத்து வரும்
பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக மாவட்ட நிர்வாகம் திகழ ஒத்துழைப்பு வேண்டும்.
இந்தப் பக்கத்தில் உங்கள்

குறைகள்,

புகார்கள்,

ஆலோசனைகளை

அந்தந்தப் பக்கங்களில் தெரிவிக்கலாம்.

தாங்கள் தெரிவிக்கும் குறைபாடுகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இப்படிக்கு,
உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் விரும்பும்
உ.சகாயம்,இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் மாவட்டம்.